×

இன்று துவங்கி மே15 வரை நடக்கிறது: மாவட்ட அளவில் கோடைகால பயிற்சி முகாம்

மயிலாடுதுறை, ஏப்.30: 2024 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கோடைக்கால பயிற்சி முகாம் மயிலாடுதுறை ராஜன்தோட்டம், சாய் விளையாட்டரங்கில் இன்று முதல் (ஏப்.30) 13.5.2024 வரை நடைபெற உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தை சார்ந்த 18 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்கள், மாணவியர்கள் மற்றும் மாணவரல்லாதோர் கலந்து கொள்ளலாம் மாவட்ட கலெக்டர் மகாபாரதி தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மயிலாடுதுறை மாவட்ட விளையாட்டுப் பிரிவால், 2024ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான இருப்பிடமில்லா கோடைகால பயிற்சி முகாம் 18 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்கள், மாணவியர்கள் மற்றும் மாணவரல்லாதோருக்கு மயிலாடுதுறை. ராஜன்தோட்டம் விளையாட்டரங்கில் இன்று முதல் 13.05.2024 வரை நடைபெறவுள்ளது.

மேற்படி விளையாட்டு பயிற்சி முகாமில் தடகளம், வாலிபால், கால்பந்து, கூடைப்பந்து மற்றும் கபடி உள்ளிட்ட விளையாட்டுக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேற்படி பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் 18 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் மாணவரல்லாாதோர தோர்கள் பயிற்சி கட்டணமாக ரூ.200/=(Fees Rs.170/- +Gst 18%) மாவட்ட விளையாட்டு அலுவலகக்தின் POS Machine மூலமாக செலுத்தி பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. எனவே, பயிற்சியில் பங்கேற்கும் 18 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்கள், மாணவியர்கள் மற்றும் மாணவரல்லாதோர்களுக்கு காலை, மாலை இருவேளைகளிலும் சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சியளிக்கப்படும்.

பயிற்சியின்போது காலை, மாலை இருவேளைகளிலும் சிற்றுண்டிகள் மற்றும் பயிற்சிப் பெற்றதற்கான சான்றிதழ்கள் வழங்கப்படும். மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த 18 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்கள், மாணவியர்கள் மற்றும் மாணவரல்லாதோர் மேற்படி பயன்களை கருத்தில் கொண்டு அதிகளவில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

The post இன்று துவங்கி மே15 வரை நடக்கிறது: மாவட்ட அளவில் கோடைகால பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,Mayiladuthurai Rajanthottam, Sai Stadium ,
× RELATED பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது...